சென்னை: திண்டிவனம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். திண்டிவனம் வட்டம் பெலாகுப்பம் ரோடு பாரதிதாசன் பேட்டையை சேர்ந்த சிறுவன் தேவேந்திரன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். உயிரிழந்த சிறுவன் தேவேந்திரனின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.