வேலூர்: திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தையொட்டி இன்று மாலை வேலூர் கோட்டத்தில் 130 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து 30 சிறப்பு பேருந்துகள், வேலூரில் இருந்து 50 சிறப்பு பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படவுள்ளது. திருப்பத்தூர் 30, ஆற்காட்டில் இருந்து 20 சிறப்பு பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படுவதாக வேலூர் கோட்டம் தெரிவித்துள்ளது.