விருதுநகர்: திருச்சுழி அருகே மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு குறித்து தொழிலாளர் துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். தொழிலாளர்துறை அளிக்கும் அறிக்கையின் பேரில் ஒப்பந்ததாரர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் விசாரணையில் தவறு நடந்திருப்பது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விருதுநகர் எஸ்.பி. கூறியுள்ளார். திருச்சுழி அருகே அரசு கல்லூரி கட்டுமான பணியில் மின்சாரம் தாக்கியதில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.