சென்னை: நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்று லாலு பிரசாத் தெரிவித்துள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலேயே வரும் மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளதாக லாலு பிரசாத் பேட்டி அளித்துள்ளார். ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் இடையே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏதும் இல்லை என்று லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.