மதுரை: தேனியில் வனத்துறை துப்பாக்கிச்சூட்டில் முதியவர் பலியான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உயநீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. முதியவர் ஈஸ்வரனின் மகள் வினோதினி தாக்கல் செய்த மனு மீது காவல்துறை விரிவாக பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு நவம்பர் 20-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.