டெல்லி: 17வது மக்களவையின் இறுதி கூட்டத் தொடர் ஜன.31ம் தேதி முதல் தொடங்கி பிப்.9 வரை நடைபெறும் என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவார் என்று அமைச்சர் ஜோஷி தெரிவித்துள்ளார். பிப்.1ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.