Friday, May 17, 2024
Home » இறந்த கணவனை பார்க்கபோன மனைவியும் விபத்தில் பலி

இறந்த கணவனை பார்க்கபோன மனைவியும் விபத்தில் பலி

by Dhanush Kumar

 

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், எசையனூரைச் சேர்ந்த பிரகாசம், தனது மனைவி சுந்தரியுடன் ஆற்காடு அடுத்த வேப்பூர் பெரியார் தெருவில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு சுமார் 10.30 மணியளவில் வேலை முடிந்து வீட்டுக்கு பிரகாசம் பைக்கில் சின்ன குக்குண்டி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த ஜி.எம்.நகர் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்த ஆதியின் பைக் மோதி சம்பவ இடத்திலே அவர் பலியானார். கணவர் இறந்த செய்தியறிந்த சுந்தரி மகள் வித்யாவுடன் ஆற்காடு நோக்கி மொபட்டில் வந்தபோது தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வேகத்தடையில் மொபட் ஏறி இறங்கியது. இதில், பின்னால் அமர்ந்து வந்த சுந்தரி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

You may also like

Leave a Comment

three + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi