சென்னை: இந்திய கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் சென்னை வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, தமிழ்நாட்டில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேற்று பிற்பகல் 12.12 மணிக்கு, சென்னையில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவரை வழியனுப்பி வைத்தனர். முன்னதாக, ஜனாதிபதி முர்முவை வழியனுப்ப வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து, மனுவையும் வழங்கினார். பின்னர் பிற்பகல் 12.12 மணிக்கு தனி விமானத்தில் ஜனாதிபதி முர்மு சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.