சென்னை: பழங்கால சிலைகள் திருடு போவதை தடுக்க தொல்லியல் துறையும், அறநிலையத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் அளித்துள்ளார். கோவில் சிலை மீட்பு தொடர்பாக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் தெரிவித்துள்ளார்.