ஆவடி: மொட்டை மாடியில் செல்போன் பேசியபோது உயரழுத்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து பாதி உடல் கருகிய நிலையில் அவரை மீட்டு தீவிர பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் நாகம்மை நகர் திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45) ஆட்டோ டிரைவர். இவரது மகன் 17 வயதுடையவர் தற்போது தான் பிளஸ்டூ தேர்வு எழுதி முடித்துள்ளார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை மொட்டை மாடியில் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அருகே சென்ற உயிரழுத்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து திடீரென பாதி உடல் கருகிய நிலையில் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொட்டை மாடியில் செல்போன் பேசியபோது விபரீதம் மின்சாரம் பாய்ந்து மாணவன் படுகாயம்
previous post