தென்காசி: தென்காசி மாவட்டம் பொட்டல், புதூர், கடையம் சாலையில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தென்தமிழக மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பதிவானதால் சாலைகள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.