தென்காசி: தென்காசி சங்கரன்கோவிலில் ஓட்டுநர் முருகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சங்கரன்கோவில் அருகே வடக்குபுதூரில் கடந்த 8ம் தேதி போலீசார் தாக்கியதில் ஓட்டுநர் முருகன் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டது. போலீசார் மீது நடவடிக்கை கோரி ஓட்டுநர் முருகன் உடலை வாங்க மறுத்த கடந்த 14 நாட்களாக கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். கிராம மக்களின் போராட்டத்தை தொடர்ந்து ஓட்டுநர் முருகன் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.