சென்னை: ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு இன்று, நாளை மற்றும் 22 ஆகிய நாட்களில் பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்ற கீழ்க்கண்ட வழியாக இயக்கப்படும் பஸ்கள், குறிப்பிட்டுள்ள அட்டவணைப்படி தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து இன்று முதல் ஞாயிறுக்கிழமை (22ம் தேதி) வரை இயக்கப்படும். 1தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தம்:
திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வழியாக செல்லும் பஸ்கள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் தாம்பரம் மெப்ஸ் பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
2 பூந்தமல்லி பைபாஸ் (மாநகர போக்குவரத்துக் கழக பூந்தமல்லி பணிமனை அருகில்): வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள். பயணிகளின் வசதிக்காக பூந்தமல்லி பைபாஸ் சாலையில் இருந்து இயக்கப்படும். 3கோயம்பேடு பேருந்து நிலையம்: மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழி இசிஆர்), மயிலாடுதுறை,
தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குருவாயூர்) பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இயக்கப்படும்.