சென்னை: திருப்பணிக்காக கோயில் நிர்வாகிகளிடம் வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 1,250 கிராமப்புற கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள ரூ.2 லட்சம் வீதம் ரூ.50 கோடி வரைவோலை வழங்கப்படுகிறது. 2022 – 23ம் ஆண்டிற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் திருப்பணி நடைபெறுகிறது. பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியில் உள்ள கோயில்களில் மேற்கொள்ளப்படுகிறது.