சென்னை: சட்டவிரோதமாக விற்கப்பட்ட கோயில் சொத்துகள் குறித்து விசாரணை நடத்தி ஆவணங்களை சேகரித்து மீட்க வேண்டும் என்று இந்து அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சொத்துக்கு பட்டா வழங்க உத்தரவிடக் கோரிய குமார் என்பவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம், அதற்கு பட்டா தர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.