ஆந்திரா: தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இறந்தவர்களின் பெயரில் கள்ள ஓட்டு போட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ள ஓட்டு போட்ட எம்.ஐ.எம். கட்சி உறுப்பினர்கள் முகமது ஜாகிர், முகமது ஷாபுதீன், ரித்தேஷ் குப்தா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஊரை விட்டு வெளியேறியவர்கள், இறந்தவர்கள், வாக்களிக்காமல் இருப்பவர்களின் பெயரில் வாக்காளர் அட்டை தயாரித்து முறைகேடு நடைபெற்றுள்ளது.