Saturday, May 11, 2024
Home » தெலங்கானாவில் மேம்பாலம் கட்டுமான பணியின் போது விபத்து: இடிபாடுகளில் சிக்கி 8 பேர் காயம்

தெலங்கானாவில் மேம்பாலம் கட்டுமான பணியின் போது விபத்து: இடிபாடுகளில் சிக்கி 8 பேர் காயம்

by Lavanya
Published: Last Updated on

ஹைதராபாத்: தெலங்கானாவில் மேம்பாலம் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் கட்டப்பட்டு வரும் பைரமல்குடா மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒரு பொறியியலாளர் மற்றும் ஏழு தொழிலாளர்கள் காயமடைந்து கிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

காயமடைந்தவர்கள் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 4 பேர் ரோஹித் குமார், புனித் குமார், சங்கர் லால் மற்றும் ஜிதேந்தர் என அடையாளம் காணப்பட்டனர். போக்குவரத்து சந்திப்பில் மேம்பாலம் கட்டப்பட்டு வரும் சாகர் ரிங் ரோட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தொழிலாளர்கள் தூண்களுக்கு மேல் பலகைகளை பதித்தபோது விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

seventeen + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi