பூந்தமல்லி: மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (25), ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வளசரவாக்கம் அடுத்த காரம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் முகேஷை வழிமறித்து கத்தியால் வெட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதில் காயம் அடைந்த முகேஷ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வாலிபரை வெட்டி செல்போன் பறிப்பு
previous post