கோவை, மே 18: கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் இந்திரா கார்டன் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிங்காநல்லூர் போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்தின்பேரில் அங்கிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். சோதனையில் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நீலிகோணாம்பாளையம் ராமசாமி நகரை சேர்ந்த ராம் ஷ்யாம் பிரவீன் (26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 பாக்கெட்டு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.