புனே: புனேயில் இளம்பெண்கள் 2 பேர் மதுபோதையில் சாலையோரம் கிடந்ததை அடுத்து, அவர்களை மீட்டு அந்த பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புனே அடுத்த கோத்ருட் பகுதியில் 2 இளம்பெண்கள், மதுபோதையில் கிடக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பொதுமக்கள் சிலர் போதையில் மட்டையாகி கிடந்த 2 இளம்பெண்களின் முகத்திலும் தண்ணீரை ஊற்றி எழுப்ப முயன்றனர். அதன் பின்னர் அவர்கள் இருவரையும் மீட்டு அப்பகுதியில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். வெளி மாநிலங்களில் இருந்து புனே பல்கலைக்கழங்களில் படிக்க வரும் மாணவ, மாணவிகள் போதை பழக்கங்களுக்கு அடிமையாவதால், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக கூறுகின்றனர்.