Monday, April 29, 2024
Home » இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

by Suresh

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். செங்கல்பட்டு அருகே ராமகிருஷ்ணா நகரை சேர்ந்த குமார் என்பவரது மகள் அர்ச்சனா (32). இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் காவித்தண்டலம் பகுதியை சேர்ந்த எல்லப்பன் என்பவரது மகன் சரத்பாபுவிற்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கும் முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், அடிக்கடி நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என அர்ச்சனா சொல்லி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், பயந்துபோன சரத்பாபு மற்றும் அவரது பெற்றோர் அர்ச்சனாவை அவரது தாய் வீட்டில் அழைத்து சென்று விட்டுள்ளனர். பின்னர், அர்ச்சனாவின் தாயிடம் அர்ச்சனாவிற்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. அடிக்கடி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி வருகிறார்.

அவரது மனம் மாறியதற்கு பிறகு அனுப்பி வையுங்கள் என ஒப்படைத்து விட்டு சென்றுள்ளனர். இதற்கிடையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அர்ச்சனா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

1 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi