நெல்லை: கங்கைகொண்டானில் டாடா சோலார் பேனல் உதிரிபாக தயாரிப்பு நிறுவன கட்டுமான பணிக்கு தடை கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். திருநெல்வேலியைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். டாடா நிறுவனம் சோலார் பேனல் உற்பத்தி தொழிலை நிறுவ கட்டடங்களை கட்டி வருகிறது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் படி முன்அனுமதி பெறாமல் கட்டடங்களை கட்டி வருகின்றனர்.