வேளச்சேரி: வேளச்சேரி விஜயநகரில் இருந்து பெருங்குடி செல்லும் தரமணி 100 அடி சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக, போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், சென்னை தெற்கு போக்குவரத்து துணை கமிஷனர் மகேஷ்குமார், அடையாறு போலீஸ் துணை கமிஷனர் பொன் கார்த்திக் தலைமையில் போக்குவரத்து போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து, அந்த சாலையை ஆக்கிரமித்து இருந்த 50க்கும் மேற்பட்ட கடைகளை நேற்று அகற்றினர். மேலும், நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த மரப்பலகைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.