தஞ்சை: தஞ்சை மாவட்டம் சோழபுரம் அருகே அய்யாநல்லூரில் வயலில் போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி விவசாயி பலியானார். காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தேவேந்திரன் உயிரிழந்தது குறித்து போலிஸ் விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோதமாக வயலை சுற்றி மின்வேலி அமைத்த உரிமையாளர் விஜயகுமார், தொழிலாளி ரத்தினம் கைது செய்யப்பட்டனர்.