தஞ்சை: தஞ்சையில் நகை வியாபாரி கண்ணில் மிளகாய் பொடி தூவி கொள்ளை அடித்து சென்றுள்ளனர். 7 கிலோ வெள்ளி பொருட்களை பைக்கில் வந்த மர்ம கும்பல் பறித்து சென்றது. பொருட்களை விற்பனை செய்துவிட்டு வீடு திரும்பியபோது கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை திரும்பியவரிடம் கைவரிசை காட்டியுள்ளனர்.