சென்னை: உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களை ஆளுநர் ரவி பின்பற்ற மறுப்பதாக வி.சி.க. குற்றம்சாட்டியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக வி.சி.க. கண்டனம் தெரிவித்துள்ளது. நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களை ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். சட்டப்பேரவையில் மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஒப்புதல் அளிப்பதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை.