சென்னை: தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து கடிதம் வழங்கி முதலமைச்சர் வலியுறுத்தினார். சென்னையில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின் டெல்லி திரும்பும் போது குடியரசு தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. நீட் விலக்கு மசோதாவுக்கு தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளித்து தமிழ்நாட்டு மாணவர்கள் நலனை காத்திட வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தார். நீட் தேர்வால் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கடிதம் எழுதியதை முதலமைச்சர் நினைவூட்டினார்.