சென்னை : தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக பழனிக்குமாரை மறு நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாநில தேர்தல் ஆணையராக பழனிக்குமார் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி வரை பதவியில் நீடிப்பார். 2021ல் மாநில தேர்தல் ஆணையராக தேர்வான பழனிக்குமார் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.