சென்னை: முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேசிய பிற்படுத்தப்பட்ட ஊழியர்களின் தேசிய பேரமைப்பு பொதுச்செயலாளர் கு.தனசேகரன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மக்களின் மிகவும் போற்றுதலுக்குரிய வாழ்ந்தவர் வி.பி.சிங். இன்றும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மனங்களில் மன்னராக வீற்றிருக்கும் மாமனிதர் வி.பி.சிங் என அவர் தெரிவித்தார்.