சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் குழு நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாளை நண்பகல் கே.எஸ்.அழகிரி தலைமையிலான குழு ஆலோசனை நடத்தவுள்ளது. கே.எஸ்.அழகிரி, முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜோய்குமார் செல்வப்பெருந்தகை நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர். ஆலோசனைக்குப் பின் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.