Tuesday, May 14, 2024
Home » தமிழகம் முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை!: செம்பரம்பாக்கம், புழல் மற்றும் சோழவரம் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்..!!

தமிழகம் முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை!: செம்பரம்பாக்கம், புழல் மற்றும் சோழவரம் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்..!!

by Kalaivani Saravanan
Published: Last Updated on

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பொன்னேரி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், உத்தரமேரூர், குருவிமலை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் இரவு முதல் மழை பெய்கிறது. தமிழகம் முழுவதும் மழை பெய்து வருவதால் ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி,

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,146 கன அடி

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,146 கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் 11 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கனஅடியில் 2,403-மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 19.17 அடியை நீர்மட்டம் எட்டியது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளதால் 174கனஅடி நீர் குடிநீருக்காக திறந்துவிடப்படுகிறது.

புழல் ஏரி நீர் இருப்பு நிலவரம்:

3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2,178 மில்லியன் கன அடியாக உள்ளது. புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக 159 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

சோழவரம் ஏரி:

1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 428 மில்லியன் கன அடியாக உள்ளது.

கண்ணன்கோட்டை ஏரி:

500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரியில் நீர் இருப்பு 425 மில்லியன் கனஅடியாக உள்ளது.

கிருஷ்ணா நதி நீர்வரத்து 361 கன அடியாக அதிகரிப்பு:

கிருஷ்ணா நதி நீர்வரத்து ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு 356 கன அடியில் இருந்து 361 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஆந்திரா கண்டலேறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணா நதி நீர் திறப்பு 2,450 கன அடியாக உள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு கிருஷ்ணா நீர் வரத்து 330 கனஅடியாக உள்ளது.

You may also like

Leave a Comment

3 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi