சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் நாளை ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.