சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: 15 நாகை மீனவர்களை இலங்கை கடற்படைகைது செய்துள்ளது. இது தொடர்ந்து வருகிறது. இந்த உண்மை தெரிந்திருந்தும் அதை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நியாயமல்ல. எனவே, இனியும் தாமதிக்காமல் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தை கூட்டி மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.