சென்னை: தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தால் உயிர் பலிகள் இனி நடக்கக் கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை படிப்படியாக குறைத்து முழு மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.