சென்னை: தமிழ்நாடு மின் நுகர்வில் நேற்று புதிய உச்சம் அடைந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்சார நுகர்வு 440.89 மில்லியன் அலகுகளாக நேற்று பதிவு செய்யப்பட்டிருப்பதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. முந்தைய உச்சபட்ச நுகர்வு நேற்று 435.85 மில்லியன் அலகுகளாக இருந்தது எனவும் மின்சார வாரியம் குறிப்பிட்டுள்ளது.