சென்னை: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. www.tnresults.nic.in., www.dge.tn.gov.in ஆகியவற்றில் மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் ஏப்ரல் 6- 20 வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 3,976 மையங்களில் 9.38 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம். மாணாக்கர்கள் தாங்கள் அளித்துள்ள செல்போன் எண்ணிற்கும் தேர்வுமுடிவுகள் குறுந்தகவலாக அனுப்பப்படும்.