சென்னை: தமிழகத்தில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மிகவும் பதற்றமானவையாக 181 வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சிவிஜில் செயலி மூலம் நேற்று வரை 4861 புகார்கள் வந்துள்ளன. ரூ.1,083 கோடி மதிப்பிலான நகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.