சென்னை: தமிழ்நாடு முழுவதும் 621 காவல் உதவி ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. இன்றும், நாளையும் நடைபெறும் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு மொத்தம் 1,86,610 பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்று பொது பிரிவினருக்கும், நாளை காவல்துறை ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.