சென்னை: தமிழ்நாட்டில் 2022 ஜனவரி முதல் 2023 ஏப்ரல் வரையான 16 மாதங்களில் 1,95,592 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. 2022 ஜனவரி – 2023 ஏப்ரல் வரை 108 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக தமிழ்நாட்டுக்கு ரூ.1,81,388 கோடி முதலீடு வந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவில் தொழிற்சாலைகள் உள்ளதாக தொழில்கள் பற்றிய ஆண்டு ஆய்வறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகம் எனவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.