சென்னை: தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வரத்தொடங்கி இருக்கும் பிரதமர் மோடி; அவர் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தோல்வி பயத்தின் கோபத்தைத்தான் மோடியின் முகம் காட்டுகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்கும் ஜனநாயக போர்க்களத்துக்கு நாம் தயாராக வேண்டும். திமுகவைப் பற்றியும், தமிழக அரசைப் பற்றியும் பிரதமர் அவதூறுகளை அள்ளிவீசி இருக்கிறார். திமுகவை அழிப்பேன் என்று கிளம்பியவர்கள் என்ன ஆனார்கள் என்பது தமிழ்நாட்டு அரசியல் வரலாறு என்று முதல்வர் தெரிவித்தார்.