குமரி: தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் ஆரல்வாய்மொழியில் தடுத்து நிறுத்தபட்டது. நாகர்கோயில் – நெல்லை தேசிய நெடுஞ்சாலை மையிலாடி விலக்கு பகுதியில் கனரக வாகனங்கள் தடுத்து நிறுத்தபட்டுள்ளது. குமரி மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட கனிமவள தடுப்பு பிரிவு அதிகாரிகள் வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.