சென்னை: மேல்சேவூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் இறந்த சிறுவன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறுவன் பிரவீன்குமார் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கவும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் வீனேஷுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.