சென்னை: மாலத்தீவு கடலோர காவல்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம், மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்களை விடுவிக்க வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.