சென்னை: தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது. உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் தலைவர் கனகராஜ் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ் வளர்ச்சி துறைக்கு 2020-21 ஆம் ஆண்டில் ரூ.63 கோடி ஒதுக்கப்பட்டு அதில் ரூ.53 கோடி செலவிடப்பட்டுள்ளது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.