நெல்லை: தமிழர் மொழி, பண்பாட்டை மோடி அல்ல உலகின் எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது என்று ராகுல்காந்தி உரையாற்றியுள்ளார். அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என கொக்கரிக்கிறார்கள். இளைஞர்களை வேலையில்லாத நிலைமைக்கு தள்ளிவிட்டு விட்டார் பிரதமர் மோடி. இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்பதற்காக நாம் மேற்கொண்டுள்ள யுத்தம் தான் இந்த தேர்தல் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.