சென்னை: சென்னை விமானநிலையத்தில் தமிழிசை நேற்று அளித்த பேட்டி: கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய அழுத்தம் எதுவுமில்லை. மக்கள் பணிக்கு திரும்ப மனமுவந்து ராஜினாமா செய்துள்ளேன். ராஜினாமா முதலில் ஏற்று கொள்ளப்பட வேண்டும். அதன் பின்னர் எனது வருங்கால திட்டம் குறித்து தெரிவிப்பேன். நேரடியாக நேர்மையான அரசியலுக்கு வருவதற்காக தான் ராஜினாமா செய்துள்ளேன். கவர்னர் வாழ்க்கை வசதியானயது. அதை விட்டு வருகிறேன் என்றால் மக்கள் எனது அன்பை புரிந்து கொள்வார்கள்.
தமிழிசை பேட்டி வசதியான கவர்னர் வாழ்க்கையை விட்டு வந்திருக்கிறேன்
previous post