சென்னை: தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வதற்கு சட்டம் – ஒழுங்கு சிறப்பாக இருப்பதே காரணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டம்-ஒழுங்கு விவகாரத்துக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. கடந்த 6 மாத காலத்தில் காவல்துறை செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது. அடுத்த ஓராண்டு காலத்துக்கு மக்களை பாதிக்கும் எந்த ஒரு சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காவல் மரணங்கள் முழுமையாக தடுக்கப்பட வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
previous post