சென்னை: சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறைக்குள் தமிழில் பேசியதால் பள்ளி ஆசிரியர் நாயகி 5ம் வகுப்பு மாணவனின் காதை பிடித்துத் திருகியுள்ளார். காதை திருகியதில், மாணவனின் காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.