திருமலை:ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், அள்ளூர் அடுத்த இசக்கப்பள்ளி மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது தமிழ்நாடு மாநிலம், கடலூரை சேர்ந்த மீனவர்களின் படகு மோதியதில் இசக்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மீனவர்களின் வலைகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பலர் காயம் அடைந்தனர். இதனால் மீண்டும் கடலில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படக்கூடிய பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இசக்கப்பள்ளி கடற்கரையில் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என பதற்றம் நிலவுவதால் இசக்கப்பள்ளி கடலோர காவல்படை போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு பணிக்காக கடலுக்குள் சென்றனர்.