சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்திற்கு 190 துணை ராணுவப் படை குழுக்களை தேர்தல் ஆணையம் அனுப்பவுள்ளது. 39 மக்களவைத் தொகுதிகளில் பூத் வாரியாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தவும், பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு படை வீரர்களை பணியில் அமர்த்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19இல் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.